மேட்டுப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிவக்குமார் எனும் இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்த நண்பர் அஜித்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலியானார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவருக்கு நித்திய பிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அஜீத்குமார்(26) என்பவரும் உறவினர்கள்.
இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சிவக்குமாரை சித்தன்குட்டையில் விடுவதற்காக அஜீத்குமார் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.
அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார், விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவருக்கு நித்திய பிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அஜீத்குமார்(26) என்பவரும் உறவினர்கள்.
இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சிவக்குமாரை சித்தன்குட்டையில் விடுவதற்காக அஜீத்குமார் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.
அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார், விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.