தேசிய அறிவியல் தினம்: கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலையில் ‘உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்’நடைபெற்ற கருத்தரங்கில், புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரக உதவி இயக்குனர் வேல்முருகன் கலந்து கொண்டார்.


கோவை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் சிறந்த இயற்பியல் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு (Raman Effect) ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு பிரகடனப்படுத்தியது.

அதன்படி இன்றைய தினம் இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கம்.



அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.



பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் செந்தில் நடேசன், வேளாண்மை முதன்மையர் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தின் உதவி இயக்குனர் முனைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் அண்ணா அரங்கில் காட்சிபடுத்தப்பட்டு இருந்த பல்வேறு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இதில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் படைப்புகள், இயற்கை பாதுகாப்பு சார்ந்த அறிவியல் படைப்புகளை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...