கோவை வடக்குமண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா்‌ குடியிருப்பு, காந்தி மாநகர் பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா் குடியிருப்பு, காந்தி மாநகர்‌ பகுதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா? என ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்‌.

பின்னர்‌ மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34-க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌, ஜீவா நகரில்‌ ரூ.5.20 கோடி மதிப்பீட்டில்‌ 1,680 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல் மற்றும் சிறுபாலங்கள் கட்டுதல், ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 850மீட்டருக்கு தொலைவிற்குத் தார் சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு, அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவாகச் செய்து முடிக்கச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத்தொடர்ந்து வார்டு எண்.71-க்கு ஆர்எஸ்புரம் திருவேங்கடசாமி சாலையில் IDUM திட்டத்தின்கீழ் ரூ.37லட்சம் மதிப்பீட்டில், 2300மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், மழைநீர் வடிகால் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.72-க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌, சுப்ரமணியம்‌ சாலையில்‌ உள்ள மாதிரி பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.110.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ ஆய்வுக்கூடங்கள்‌, ஸ்மார்ட்‌ வகுப்பறை மற்றும்‌ மாணவியர்‌ தங்கும்‌ விடுதி ஆகிய கட்டிடங்களின்‌ கட்டுமானப் பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்பு, வார்டு எண்‌.72-க்குட்பட்ட பூ மார்க்கெட்‌ பகுதியில்‌ ரூ.120 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டு வரும்‌ இடங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்‌ தவமணி பழனியப்பன்‌, உதவி ஆணையர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ (பொ)விமலா, கலாவதி, சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்கள்‌ இளங்கோ, நாசர்‌, ஜீவராஜ்‌, ஹரிபிரசாத்‌, கமலக்கண்ணன்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ விஜயகுமார்‌, சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...