கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா என்பவரை கைது செய்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கருமத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனைக்குப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தலைமையிலான காவல்துறையினர் கருமத்தம்பட்டிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிமகாநந்தா என்பவரது மகன் மணிநந்தர் மகாநந்தா(32) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனைக்குப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தலைமையிலான காவல்துறையினர் கருமத்தம்பட்டிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிமகாநந்தா என்பவரது மகன் மணிநந்தர் மகாநந்தா(32) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.