கோவை கருமத்தம்பட்டியில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா என்பவரை கைது செய்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கருமத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனைக்குப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தலைமையிலான காவல்துறையினர் கருமத்தம்பட்டிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிமகாநந்தா என்பவரது மகன் மணிநந்தர் மகாநந்தா(32) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...