உடுமலையில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

உடுமலை அருகே நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சரும், கட்சியின் கோவை மேற்கு ஒன்றிய பொறுப்பாளருமான சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது.



பொதுக் கூட்டத்தில் சண்முகவேலு பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும்விரிவுபடுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தற்போது திமுக அரசு செயல்படுத்தி வருகின்றது.



தாலிக்கு தங்கம் சத்துணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

அமைப்புச் செயலாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான தொட்டியம் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனி குமணன், மணிகண்டன், பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், பேரூர் கழகச் செயலாளர் தளபதி நடராஜ், உடுமலை நகர கழக செயலாளர் கே ஆர் பி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்வீட் ஆனந்தன், உடுமலை நகரக் இணைச் செயலாளர் பனியன் துரை உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...