கோவையில் ஆம்புலன்சிலேயே இளம்பெண்ணுக்கு பிரசவம் - பூமிக்கு வந்த அழகான தேவதை!

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண் ஷிவானிக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்ததால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களே பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே பிரசவ வலியில் துடித்த இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாகுமார். இவரின் மனைவி ஷிவானி (22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது.

இதனால் மிகுந்த வலியில் துடித்த அவரை, 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், உக்கடம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது ஷிவானிக்கு வலி அதிகரித்தது.

குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நிபுணர் தமிழ்செல்வம் சாலையோரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு பைலட் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஷிவானிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் பிரசவ அவசரம் உணர்ந்து விரைந்து செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...