ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மாலையும் ஆழியார் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் காட்டு யானை ஒன்று வழிமறித்து நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை: ஆழியார் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதோடு, சாலையில் செல்லும் வாகனங்களைச் சேதப்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை ஆழியார் சோதனை சாவடி அடுத்து வாய்க்கால் மேடு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.
யானை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை சாலை நின்றதால், தகவல் அறிந்து வந்த ஆழியார் சோதனைச் சாவடி வனத்துறையினர் வாகனத்தின் மூலம் யானையை வனப்பகுதியில் விரட்டினர்.
காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.