குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததில் கோவை முதலிடம் - மாவட்ட எஸ்.பி தகவல்

தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து திருடப்படும் மற்றும் தவறவிடும் செல்போன்களை போலீசார் மீட்டு அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேசியதாவது:



தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளது. கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

பவானி ஆற்றில், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சாவை அனைவரும் கடத்துகின்றனர். ஆகையால் இதில் வடமாநிலத்தவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளது எனச் சொல்ல வேண்டாம். கூரியர் மூலம் வடமாநிலங்களிலிருந்து கஞ்சாவை அனுப்புகின்றனர். அதையும் கண்காணித்து வருகிறோம்.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 1,550 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். NDPS சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 68பேர் கைதுசெய்யப்பட்டு சுமார் 312.5. கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...