தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம்முன் வாரச்சந்தை பகுதியில் அலங்கரிக்கபட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகரசெயலாளர் ஹக்கிம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழக்கடை கார்த்தி வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வனிதா மணி, மளிகை செல்வம், அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம், தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் வாரச்சந்தை அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி பேரூர் கழக செயலாளர் நிலம்பூர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மத்திய பேருந்து நிலையம்முன் வாரச்சந்தை பகுதியில் அலங்கரிக்கபட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகரசெயலாளர் ஹக்கிம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழக்கடை கார்த்தி வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வனிதா மணி, மளிகை செல்வம், அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம், தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் வாரச்சந்தை அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி பேரூர் கழக செயலாளர் நிலம்பூர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.