உடுமலை, மடத்துக்குளத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் - உருவப் படத்திற்கு மலர் மரியாதை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



மத்திய பேருந்து நிலையம்முன் வாரச்சந்தை பகுதியில் அலங்கரிக்கபட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு நகரசெயலாளர் ஹக்கிம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பழக்கடை கார்த்தி வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வனிதா மணி, மளிகை செல்வம், அண்ணா தொழிற்சங்கம் துபாய் ஆறுமுகம், தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் வாரச்சந்தை அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல், மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி பேரூர் கழக செயலாளர் நிலம்பூர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...