தாராபுரத்தில் அரசு குடியிருப்புவாசிகள் சாலைமறியல் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் -உடுமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் உடுமலை சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்பில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளில்சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி குடிநீர் வசதி தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் செய்து தராமல் வீட்டு வசதி வாரியத்தினர் மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாயை சம்பளத்தில் வாடகையாக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்து வருகின்றனர்.



கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி பாம்பு மற்றும் விஷ கிருமிகள் உள்ளிட்ட பிராணிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமப்பட்டுவருகின்றனர்.

இதற்கு தீர்வு காணக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2019 ஆண்டு முதல் வீட்டு வசதி வாரியத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஈரோடு வீட்டு வசதி வாரியத்தினர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இதனால் அதிருப்தி அடைந்த குடியிருப்பு வாசிகள், குடிநீர் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து இருப்பதை சரி செய்ய கோரி தாராபுரம் உடுமலை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் 24வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி ஹரிஹரன், நகராட்சி பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புமுழுக்க முழுக்க வீட்டு வசதி வாரிய கட்டுப்பாடில் இருந்து வருகிறது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். இதனை சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால்தான் இப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதிமக்களுக்குதேவையானகுடிநீர் தங்குதடையின்றிவழங்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் தாராபுரம் -உடுமலை சாலையில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவிவயது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...