கோவை மாவட்டம் அன்னூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது42), கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விசாரணை முடிவுபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி தங்கராஜுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பரசுராமன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விசாரணை முடிவுபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளி தங்கராஜுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பரசுராமன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.