மக்னா யானை எப்படி பிடிபட்டது - ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விளக்கம்

கோவை மாநகரில் இரண்டு நாட்களாகச் சுற்றி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த யானை பிடிபட்டது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



கோவை: கோவையில் சுற்றி வந்த மக்னா யானையைப் பிடித்தது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா விளக்கமளித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதிகள் கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடுவிக்கப்பட்டதாகவும், 10 நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த அந்த யானை மீண்டும் 19ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி விட்டது.

வனப்பகுதியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பொள்ளாச்சி, சேத்துமடை பகுதியிலிருந்து தற்போது வரை யானையின் நடமாடத்தை 70 முதல் 100 வனத்துறையினர் கண்காணித்து வந்து தற்போது பிடித்துள்ளதாகவும், இதில் 200 வனத்துறையினர், 100 காவல்துறையினர், கோவை, ஓசூர், சத்தியமங்கலம் பகுதியிலிருந்து வனத்துறை மருத்துவர் குழுவினர் ஈடுப்பட்டதாக தெரிவித்தார்.



மேலும் பிடிப்பட்ட இந்த மக்னா யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், யானையை வனப்பகுதியில் எங்கு விடலாம் என, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.



யானைக் கடந்து வந்த தூரத்தில் இதுவரை எவ்வித உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், பொருட்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சின்னதம்பி கும்கி யானை, மக்னா யானையைப் பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது என்றார்.



வனத்துறை மருத்துவர் சுகுமார் பேசுகையில், இந்த மக்னா யானையை பிடிக்க 4 மருத்துவக் குழுக்கள் செயல்பட்டதாகவும், மக்னா யானையைப் பிடிக்கத் தேவையான அளவிற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தியதாகவும், அந்த யானைக்கு 40லிருந்து 45 வயது இருக்கும் என்றார்.

இது மக்னா என்ற போதிலும் யாரையும் தாக்காமல் அருகில் செல்பவர்களிடமிருந்து விலகித் தான் சென்றது எனத் தெரிவித்த அவர், அது அதனுடைய குணமாக இருக்கலாம் என்றார்.

மேலும் யானையை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்து உணவு, குடிநீர் ஆகியவை வைத்து வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...