திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பயன்படுத்திய பொருட்கள் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.
பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி பெண்கள் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மாணவிகளுக்கான தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்திய, குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள், மட்கலங்கள், இரும்பு கசடங்கள், இரும்பு உருக்கு உதுலை சுடுமண் குழாய்கள், ஆயுதமாக பயன்படுத்திய கற்கள் துளையுடன் கூடிய சிறு சக்கரம் கல்மணிகள், சங்குகள், புகைப்பான் எனபண்டைய மக்களின் தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில், கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் குறித்து மாணவிகளுக்கு வரலாற்று துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களை வியப்புடன் கண்டு களித்தனர்.