பணியாளர்களை போக்குவரத்துக் கழகம் நேரடியாக நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சங்கம் சி.ஐ.டி.யூ. சார்பில் உடுமலையில் உள்ள போக்குவரத்து கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணைத்தலைவர் செவந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில், கோரிக்கைகளை விளக்கி மண்டல துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளைத்தலைவர் பாபு, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பெரிய மயில்சாமி உள்ளிட்டோர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தனியார் ஒப்பந்தம் மூலமாக பணி நியமனம் செய்யும் வகையில், அரசாணை வெளியிட்டதைக் கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தேவையான பணியாளர்களை போக்குவரத்துக் கழகம் நேரடியாக நியமனம் செய்யக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் புதிதாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வுக்கால பலன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணைத்தலைவர் செவந்தி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில், கோரிக்கைகளை விளக்கி மண்டல துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன், கிளைத்தலைவர் பாபு, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பெரிய மயில்சாமி உள்ளிட்டோர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தனியார் ஒப்பந்தம் மூலமாக பணி நியமனம் செய்யும் வகையில், அரசாணை வெளியிட்டதைக் கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தேவையான பணியாளர்களை போக்குவரத்துக் கழகம் நேரடியாக நியமனம் செய்யக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் புதிதாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஓய்வுக்கால பலன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.