ஊட்டி தாவரவியல் பூங்காவில் துலிப் மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக வளர்க்கப்பட்டு, கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துலிப் மலர் உள்ளிட்ட, 50 வகையான வண்ண மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: உதகை தாவர பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள துலிப் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவைக் காண அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.



ஆனால் தற்போது குளிர்காலம் என்பதால் பூங்கா மலர்கள் இன்றி பொலிவிழந்து காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பூங்காவை மட்டுமே சுற்றிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.



இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவிற்குள் உள்ள பழமையான கண்ணாடி மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகளைப் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.



அதாவது கண்ணாடி மாளிகைக்குள் பனியின் தாக்கம் இருக்காது என்பதாலும், குளிரிலும் பூக்கள் பாதிக்காத வகையில், 50 வகையான மலர் செடிகள் கொண்ட 25 ஆயிரம் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



அதில் வழக்கமான ரகங்களான பெட்டூனியா, காகித பூ, ஐட்ரிஜினியா, பால்சம், பிக்கோனியா, டெய்சி எனப் பல வண்ணங்களில் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



அதில் ஜம்மு காஷ்மீர் போன்ற பனிப் பிரதேசங்களிலும் மட்டுமே பூக்க கூடிய துலிப் மலர்ச் செடிகள் தாவரவியல் பூங்கா பண்ணையில் முதல் முறையாக பயிரிட்டு வெற்றி கரமாக வளர்க்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளதையடுத்து 4 வித துலிப் மலர் தொட்டிகளும் இடம் பெற்றுள்ளன.



சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பிங்க் என பூத்துள்ள துலீப் மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...