வழக்கில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவர், சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவு

குன்னூரில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - திமுகவினர் மோதிக் கொண்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்பட மூவர், எடப்பள்ளி பகுதியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 மாவட்ட நீதிபதி உத்தரவு.


நீலகிரி: நீலகிரியில் வழக்கு விசாரணையில் ஆஜராகாத அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரும் தலா ரூ.10,000 செலுத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டேண்மெண்ட் போர்டில் 7 வார்டுகள் உள்ளன. இந்த போர்டுக்கு ராணுவ அதிகாரி தலைவராக இருக்கும் நிலையில் துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நியமனம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 3 அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் திமுக துணை தலைவருக்கு ஆதரவாக வாக்களிக்க சென்றனர்.

அப்போதைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கா.ராமசந்திரன் மற்றும் குன்னூர் நகர் மன்ற உறுப்பினர் ராமசாமி மற்றும் திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோர் அழைத்து சென்ற போது ஆத்திரமடைந்த அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதுடன் கண்டோண்மெண்ட் அலுவலகத்தையும் சேதப்படுத்தினர்.

அந்த சம்பவத்தில் அப்போதைய கண்டோண்மெண்ட் துணை தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த பாரதியார் உள்பட அதிமுகவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் திமுக தரப்பில் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து அமைச்சர் கா.ராமசந்திரன், அப்போதைய கண்டோண்மெண்ட் கவுன்சிலர் வினோத் மற்றும் அதிமுகவை சேர்ந்த பாரதியார் ஆகியோர் குன்னூர் அடுத்த எடபள்ளியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு தலா ரூ.10,000 செலுத்த உத்தரவிட்டார்.

மேலும் அடுத்த வழக்கு விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...