உடுமலை அருகே திருமூர்த்திமலையில் சிவராத்திரி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை கோவிலில் சிவராத்திரியையொட்டி நேற்றிரவு முதல் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அங்கு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, இரவு 8 மணி அளவில், முதல் கால பூஜைகளும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குறிப்பாக மங்கள இசை, பாட்டும் பரதமும், தேவராட்டம் கிராமிய நாட்டுப் புறக்கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய, விடிய நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றது.



இதை தொடர்ந்து 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீப தரிசனம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு உடுமலையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.



இந்த நிகழ்வுக்கு உடுமலை, பொள்ளாச்சி, பழனி, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.



மேலும், கோவில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தினர்.

இதனிடையே மகாசிவராத்திரியை முன்னிட்டு உடுமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், போடிபட்டி முருகன் கோவில் சின்ன விநாயகர் கோவில் மற்றும் தில்லை நகர் ரத்ன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...