நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வாகனத்தில் அடம்பிடித்து ஏறிய அர்ஷத் என்ற குழந்தை, ஆட்சியர் மடியில் அமர்ந்து இறங்க மறுத்து சுட்டித்தனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றார். அந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு தனது வாகனத்தில் ஏறியபின், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.
பின்பு ஆட்சியரின் வாகனத்தை ஓட்டுநர் இயக்க ஆரம்பித்துள்ளார். அப்பொழுது அர்ஷத் என்ற குழந்தை ஆட்சியரின் வாகனத்திற்குள் ஏறியே ஆகவேண்டுமென அடம்பிடித்துள்ளது.
உடனடியாக குழந்தையை ஆட்சியர் அம்ரித் வாகனத்தில்ஏற்றி, தனது மடியில் வைத்துக் கொண்டார். ஆட்சியர் என்று தெரியாமல் அழகாக அவர் மடியில் அமர்ந்து கொண்ட குழந்தை, பின்னர் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து அடம்பிடித்துள்ளது. வேறு வாகனம் வந்துவிட்டது. அதில் செல்லலாம் என்று அழைத்தபோதும் குழந்தை, மாவட்ட ஆட்சியரின் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்து மறுத்துவிட்டது.
ஆட்சியரின் வாகனத்தின் கதவு திறந்திருந்த போதிலும் அந்தக் கதவை நைசாக அடைத்து பின் கதவுகள் திறக்காமல் இருக்க பயன்படுத்தப்படும் லாக்கை அழுத்தி ஆட்சியருடன் செல்ல அடம்பிடித்தது. அப்போது, ஆட்சியர், வேறு வாகனத்தில் செல்லலாம் என கூறி தானும் இறங்குகிறேன் என்று கூறிய பின்னரே அந்தக் குழந்தை வாகனத்தில் இருந்து இறங்கியது.
குழந்தையின் இந்த சுட்டித்தன வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.