கோவை ஈஷாவில்‌ கோலாகலமாக தொடங்கிய 'யக்ஷா' கலை திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று (பிப்‌.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ ரமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷா'கலைத்‌ திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈஷாவின்‌ மஹாசிவராத்திரி விழா வரும்‌ 18ஆம்‌ தேதி மிக விமரிசையாகவும்‌, பிரம்மாண்டமாகவும்‌ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும்‌ 'யக்ஷா' கலைத்‌ திருவிழா இன்று மாலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சி கலாச்சாரம்‌, இசை மற்றும்‌ நடனத்தின்‌ செறிவை பறைசாற்றும்‌ விதமாக உலகப்புகழ்‌ பெற்ற கலைஞர்களைக்‌ கொண்டு நடத்தப்படுகிறது.



விழாவின்‌ தொடக்கமாக பண்டிட்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அவரது,‌ அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும்‌ மெய்‌ மறக்கச்‌ செய்தது. உலகம்‌ முழுவதும்‌ இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ இந்த நிகழ்ச்சியை நேரில்‌ கண்டு களித்தனர்‌.

அகில இந்திய வானொலியில்‌ 'ஏ-டாப்‌' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின்‌ ஒளி' என வர்ணிக்கப்படும்‌ ஜெயதீர்த்‌ மேவுண்டி, பண்டிட்‌. ஜஸ்ராஜ்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, யங்‌ மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத்‌ கவுரவ்‌ புரஸ்கார்‌, சண்முகானந்தா சங்கீத்‌ ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்‌ தொடர்ந்து நாளை (பிப்‌. 16) புல்லாங்குழல்‌ இசைக்கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சியும்‌, நாளை மறுநாள்‌ (பிப்‌. 17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ ஈஷாவில்‌ உள்ள சர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 7 மணி முதல்‌ 9 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...