பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சோகம் - போலீசார் விசாரணை

பல்லடம் - மங்கலம் சாலையில் கட்டுமான பணியின்போது டிரில்லிங் இயந்திரத்தின் ஒயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள ஆலூத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துக்குமார். இவருக்கு மைதிலி என்ற மனைவியும், மவுலிஷ் என்ற மகனும் உள்ளனர்.



இந்நிலையில், கூலி தொழிலாளியான முத்துக்குமார், பல்லடம் - மங்கலம் சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே இன்று பிற்பகல் ஊட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழி எடுக்கும் பணியின் போது ட்ரில்லிங் மெஷினை பயன்படுத்தி உள்ளனர்.



எதிர்பாராத விதமாக டிரில்லிங் மிஷின் மின்சார கம்பி அறுந்ததால் முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.



அவருடன் பணிபுரிந்த மற்றொரு ஊழியர் மின் இணைப்பை துண்டிக்க முயற்சித்தும், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் இணைப்பை துண்டிக்க சென்றதால் முத்துக்குமாருடன் பணியாற்றிய சசிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமாரின் உடலை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...