கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் வகுப்பறையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சக மாணவிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் ஸ்ரீ வர்ஷா (வயது20). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
ஸ்ரீ வர்ஷாவிற்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்ததாக தெரிகிறது. ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பில்லை என அவர் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஸ்ரீவர்ஷா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக மாணவ, மாணவிகள் ஸ்ரீ வர்ஷாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி ஸ்ரீ வர்ஷா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஸ்ரீ வர்ஷாவிற்கு வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்ததாக தெரிகிறது. ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பில்லை என அவர் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஸ்ரீவர்ஷா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் கையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக மாணவ, மாணவிகள் ஸ்ரீ வர்ஷாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி ஸ்ரீ வர்ஷா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.