நாடாளுமன்றத்தில் நடக்கும் நல்லவைகளுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் எம்.பிக்களால் மட்டுமே காரணம். ஆந்திரா,தெலங்கானா எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருவதாக எம்பி சு.வெங்கடேசன் பேச்சு.
திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்களான கோவையைச் சேர்ந்த பி. ஆர்.நடராஜன், மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த மாநாட்டில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பருத்தி விலை உயர்வதால் நூல் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பருத்தி விலை உயர்ந்தபோதும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை. இடைத்தரகர்கள் மட்டுமே உயர்ந்துள்ளனர்.
திருப்பூரின் தொழில் நிலையை உயர்த்த சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை என அனைத்து மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். இன்னும் நாடாளுமன்றத்தில் நல்லவை நடக்கிறது என்றால் அது கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எம்பிக்களால் மட்டுமே.
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருகிறது, என்றார்.
இந்த மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்.பி.க்களான கோவையைச் சேர்ந்த பி. ஆர்.நடராஜன், மதுரையை சேர்ந்த சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் பேசிய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பருத்தி விலை உயர்வதால் நூல் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பருத்தி விலை உயர்ந்தபோதும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை. இடைத்தரகர்கள் மட்டுமே உயர்ந்துள்ளனர்.
திருப்பூரின் தொழில் நிலையை உயர்த்த சட்டமன்றம், மக்களவை, மாநிலங்களவை என அனைத்து மன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். இன்னும் நாடாளுமன்றத்தில் நல்லவை நடக்கிறது என்றால் அது கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எம்பிக்களால் மட்டுமே.
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களின் குரலாய் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எம்.பிக்களை குரல் எழுப்ப சொல்வதும் நிகழ்ந்து வருகிறது, என்றார்.
இந்த மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டீமா முத்துரத்தினம் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.