ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் முறுக்கு கடையில், பொதுமக்களுக்கும் உடன் வந்த கட்சியினருக்கும் முறுக்கு விற்பனை செய்தவாறு கடை உரிமையாளரிடம் ஆதரவு திரட்டினார்.
ஈரோடு: திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி, திமுக கூட்டணி தொண்டர்கள் முனிசிபல் காலனி பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது முறுக்கு தயாரிக்கும் கடையில் வாக்கு சேகரித்த அமைச்சர், அங்கிருந்த முறுக்கு பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கும், உடன் வந்த கட்சியினருக்கும் விற்பனை செய்தவாறு கடை உரிமையாளரிடம் ஆதரவு கோரினார்.
அப்போது செய்திகாளர்களிடம் செஞ்சி மஸ்தான், தேர்தல் குறித்து பகிர்ந்துகொண்டார். திமுக அரசின் சாதனைகளை மக்கள் மனம் திறந்து பாராட்டுவதாகவும், பெண்கள் மீது அக்கறையுள்ள ஆட்சியாக திகழ்வதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திகழ்வதாகவும், அதிமுகவினர் இதனை மாற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதாகவும், திமுக கூட்டணி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கொள்கை கூட்டணி என்றும், அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் கூறினார். டெல்லிக்கு அடிமைத்தனமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, அடிமைத்தனமாகக் கட்சி நடத்தி வருவதாகவும் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி, திமுக கூட்டணி தொண்டர்கள் முனிசிபல் காலனி பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது முறுக்கு தயாரிக்கும் கடையில் வாக்கு சேகரித்த அமைச்சர், அங்கிருந்த முறுக்கு பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கும், உடன் வந்த கட்சியினருக்கும் விற்பனை செய்தவாறு கடை உரிமையாளரிடம் ஆதரவு கோரினார்.
அப்போது செய்திகாளர்களிடம் செஞ்சி மஸ்தான், தேர்தல் குறித்து பகிர்ந்துகொண்டார். திமுக அரசின் சாதனைகளை மக்கள் மனம் திறந்து பாராட்டுவதாகவும், பெண்கள் மீது அக்கறையுள்ள ஆட்சியாக திகழ்வதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசின் சாதனை திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திகழ்வதாகவும், அதிமுகவினர் இதனை மாற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதாகவும், திமுக கூட்டணி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கொள்கை கூட்டணி என்றும், அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் கூறினார். டெல்லிக்கு அடிமைத்தனமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, அடிமைத்தனமாகக் கட்சி நடத்தி வருவதாகவும் கூறினார்.