திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் மோகன் என்பவரின் வீட்டில் தண்ணீர் நிரப்பி வைக்க வைத்திருந்த பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை, இரவு நேரத்தில் மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
திருப்பூர்: காளம்பாளையத்தில் தண்ணீர் ட்ரம்மை மர்மநபர்கள் திருடிச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.
திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பி வைக்க பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை வைத்திருந்தார். இன்று அதிகாலை தண்ணீர் நிரப்ப வந்த பொழுது ட்ரம்மை காணவில்லை.
இதனையடுத்து அருகில் தேடிய அவர், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, அதில் மர்மநபர் ஒருவர் பிளாஸ்டிக் ட்ரம்மை தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து அந்நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.