கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி: வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள்!

கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த கவிதை போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ்-க்கு முதல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதேபோல் தென்காசி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருஷ்ணம்மாளுக்கு 2ஆம் பரிசாக ரூ.1,500 வழங்கப்பட்டது.

மேலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரிதன்யா சாருமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ.500, அதே பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்த சுந்தருக்கு 4ஆவது பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.



தொடர்ந்து இந்த கவிதை போட்டியில் மேடையில் தங்கள் கவிதைகளை வாசித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் முனைவர் மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமகால சமூக-அரசியல் பிரச்சினைகளை வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்துகொள்ளும் கவிதைகள் மட்டுமே தலைமுறைகளை கடந்து செல்லும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அருவி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், இந்த விழாவை சக்தி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...