மீண்டும் ஏறுமுகத்தில் ஆட்டோமொபைல் தொழில் - சந்தை மதிப்பீட்டாளர்கள் கருத்து!

நடப்பாண்டில் ஆட்டோமொபைல் தொழில் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றால் கடந்த மூன்று வருடங்களாக முடங்கி கிடந்த தொழில்துறை சமீபத்தில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக இருப்பது ஆட்டோ மொபைல் வர்த்தகம்.

குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் செய்ய முடியாத நிலையில், ஆட்டோ மொபைல் தொழில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைப்பு மற்றும் விற்பனை மந்தம் ஆட்டோமொபைல் தொழில் வளத்தையே ஆட்டிப் படைத்தது.



இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்பொழுது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ மொபைல் தொழிலுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது. அந்த வகையில், டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சக்கர விற்பனை முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 14 % விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 8 % குறைவு எனவும், 3 சக்கர வாகன விற்பனை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல், பயணிகளின் கார் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 16 % உயர்ந்துள்ளது. பயணிகள் கார் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில் சிறிய கார்களின் விற்பனை சற்று தோய்வடைந்துள்ளது.



ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது புள்ளிவிவரம் சற்று ஏறி இறங்கினாலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்துள்ளது.

கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோ மொபைல் சேவை என்பது அத்தியாவசியம் என்பதனால் இனிவரும் காலங்களில் சிறப்பான இடத்தை நோக்கி ஆட்டோமொபைல் வர்த்தகம் நகரும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...