கோவை துடியலூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது துடியலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பதும், கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து துடியலூர் பகுதியில் விற்றுவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கைதான இளைஞரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது துடியலூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பதும், கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கஞ்சா வாங்கி வந்து துடியலூர் பகுதியில் விற்றுவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கைதான இளைஞரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.