கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த காட்டுயானைக் கூட்டம், அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.
கோவை: கோவை பாலமலை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கெம்பனூர் பகுதியில் நேற்று 6 காட்டுயானைகள் நுழைந்தன. உணவு தேடி வந்த அந்த யானைக் கூட்டம், அங்கிருந்த திவாகர் என்பவரது தோட்டத்தில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்திச் சென்றது.
விவசாய நிலங்களில் கூட்டமாக உலாவந்த காட்டுயானைகளின் வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கெம்பனூர் பகுதியில் நேற்று 6 காட்டுயானைகள் நுழைந்தன. உணவு தேடி வந்த அந்த யானைக் கூட்டம், அங்கிருந்த திவாகர் என்பவரது தோட்டத்தில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்திச் சென்றது.
விவசாய நிலங்களில் கூட்டமாக உலாவந்த காட்டுயானைகளின் வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகப் பரவிவருகிறது.