கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு கிரிவலம் சென்ற போது பக்தர்களை வழிமறித்த யானையை பாசத்தோடு பக்தர்கள் வழியனுப்பி வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை: யானையை போ பா...போ பா...போங்க.. போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள யானைகள்,மான்கள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது வெளியே உலா வருகின்றன.
இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள் வனப்பாதை வழியாக கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த யானை அவர்களை வழிமறித்தது.
பக்தர்கள் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காட்டு யானை வந்திருக்கின்றன. பக்தர்கள் நடைபாதையில் யானை கடந்து சென்றிருக்கின்றன. அப்போது யானையை பார்த்த சிலர் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கின்றனர். யானை தடுப்பு சுவரில் ஏறி கிரிவல பாதையில் யானை நடந்து சென்றது.

அப்போது யானையை போ பா... போ பா... போங்க... போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பினர்.
இந்த காட்சி அங்குள்ள பக்தர்களால் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள யானைகள்,மான்கள், காட்டுப்பன்றிகள் அவ்வப்போது வெளியே உலா வருகின்றன.
இந்நிலையில் மருதமலை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள் வனப்பாதை வழியாக கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த யானை அவர்களை வழிமறித்தது.
பக்தர்கள் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு காட்டு யானை வந்திருக்கின்றன. பக்தர்கள் நடைபாதையில் யானை கடந்து சென்றிருக்கின்றன. அப்போது யானையை பார்த்த சிலர் புகைப்படம் எடுக்க முயன்றிருக்கின்றனர். யானை தடுப்பு சுவரில் ஏறி கிரிவல பாதையில் யானை நடந்து சென்றது.
அப்போது யானையை போ பா... போ பா... போங்க... போ சாமி... என பாசமுடன் முருக பக்தர்கள் வழியனுப்பினர்.
இந்த காட்சி அங்குள்ள பக்தர்களால் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.