கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஃபெர்டிலிட்டி மருத்துவர் தகவல்


கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-



"விளக்கமுடியாத மகப்பேறின்மை" என்பது காரணம் கண்டறியப்பட முடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைப் பெறின்மை ஆகும்.

90 சதவிகித தம்பதியரில் கருத்தரிக்காததற்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் ஆணிடமோ, பெண்ணிடமோ குறைபாடுகள் உள்ளதை அறியலாம். சில சமயம் ஆண், பெண் என இருவரிடமும் குறைகள் இருப்பதைக் கண்டறியலாம்.

பொதுவாக குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் தம்பதியருக்கு கருக்குழாய் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் காரணம் அறியாத நிலையில் அவர்கள் விளக்கமுடியாத மகப்பேறின்மையில் அடக்கப்படுகிறார்கள்.

கோவையில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் இத்தகைய விளக்க முடியாத குழந்தையின்மை இருப்பது தெரிகிறது. இத்தகைய விளக்க முடியாத மகப்பேறின்மையில் கருமுட்டை, விந்தணு போன்ற அடிப்படை நிலையில் குறைபாடுகள் இருப்பதார் சாதாரண பரிசோதனைகளில் கண்டறியப்பட முடிவதில்லை.

சாதாரணமாகத் தெரியும் விந்தணு, கருமுட்டை கூட கருவாகும் தன்மை அற்றுப் போகலாம். மைக்ரோஸ்கோப்பியில் நன்றாகத் தோன்றும் கரு, கருப்பையில் பொருந்தாமல் போகலாம். இவை சாதாரண பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கருமுட்டை தரம் குறைபாடு, விந்தணு செயல்திறன் குறை, கருப்பை இருந்தும் ஒட்டாமல் இருக்கும் தருணம்போல கண்டறிய முடியாத மகப்பேறின்மைக்கு IVF தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழியாகும்.

விளக்கமுடியாத மகப்பேறின்மை கொண்டோர் பல பரிசோதனைகள் மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி விரக்தியில் இருக்கும நிலையில் IVF சிகிச்சை முறையில் கருவுற்றவுடன் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...