பல்லடத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அரிவாள் முனையில் பணம் கொள்ளை - தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பெரும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஜெயமணி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயமணி தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டதால் கதவை திறந்து பார்த்துள்ளார்.



அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் அரிவாளுடன் ஜெயமணியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்துள்ளார்.



இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் அரிவாலுடன் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பல்லடம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...