கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜகவினர் கைது

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆர்.எஸ் புரம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் வலியுறுத்தினார். மேலும் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைவழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாமல் காலதாமதம் செய்வது வெட்கக்கேடு எனவும், தமிழக அரசியலில் உள்ளவர்கள் ஆவியை பார்த்து பயப்படுவது போல காவியை பார்த்து பயப்படுவதாகவும் கூறிய அவர், வருங்காலங்களில் தமிழகத்தில் காவி கொடி பறந்தேதீருமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...