அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும், ஒ.பன்னீர்செல்வம் முதல்வாரக தொடர வேண்டுமென்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டுமென்ற தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இப்படி தான் வர வேண்டுமென மக்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக உடையக்கூடாது என்பதற்காக தான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் போது ஆதரவு அளித்ததாகவும், ஆனால் அன்றைய நிலை இன்று இல்லை எனவும் கூறிய அவர், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவார்கள் எனவும், கட்சி உடையக்கூடாது என விரும்பினால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். சசிகலாவிற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போது முன்கூட்டியே எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஒ.பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாரையும் முதல்வராக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...