சமத்துவ கழக இளைஞர் அணி சார்பில் ரயில்நிலையம் முற்றுகை போராட்டம்


பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடக்கோரி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய சமத்துவகழக இளைஞர் அணியினர் 68 பேர் கைது

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்றைக்கு கொண்டாடப்படும் சூழ்நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து சாதியற்ற சமத்துவ சமூகம்  இந்தியாவில் உருவாக்கிட காதல் திருமணத்தை பாதுகாக்க சட்டம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ கழக இளைஞர் அணியின் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடவும், தமிழகத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலைகளை தடுத்திடக்கோரியும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடக்கோரியும் வலியுறுத்தி ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 குழந்தைகள் உட்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. காதல் திருமணம் புரிந்து கொண்ட புது ஜோடிகள் மற்றும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டி குடும்பத்தோடு கொண்டாடினார்கள். காதல் திருமணங்கள் தான் சாதி, மதத்தை அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும் என்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...