தமிழக ஆளுநர் கால அவகாசம் எடுத்து கொண்டது சரியான நடவடிக்கை -பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன்


அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருப்பது ஊழல் ஒழிப்பின் முதல்படி எனவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவு எடுக்க வேண்டுமெனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இருப்பது ஊழல் ஒழிப்பின் முதல்படி என தெரிவித்தார். 

மேலும் இந்த தீர்ப்பின் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், ஊழல் ஒழிக்கப்பட்டு தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டுமென்பதே எங்களது கருத்து எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்ப ஆட்சி காலத்தில் ஊழல் கறைபடியாமல் தான் ஆட்சி செய்ததாகவும், ஆனால் சசிகலாவின் நட்புக்கு பின்னரே அவரது ஆட்சி மீது ஊழல் கறை படிந்ததாகவும் கூறிய அவர், யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவு எடுக்க வேண்டுமெனவும், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிகளில் அடக்கி அடைத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் கால அவகாசம் எடுத்து கொண்டது சரியான நடவடிக்கை தான் என்பதை நீதிமன்ற தீர்ப்பு தெளிவுப்படுத்தி உள்ளதாகவும், தமிழக ஆட்சியில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் நிழலோ, சாயலோ வந்தால் மோசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும்  அவர் தெரிவித்தார். 

ஊழல் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போலவும், பா.ஜ.க புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டுமென கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழகத்தில் காலுன்ற ஆரம்பித்து விட்ட பா.ஜ.க நேர்வழியில் அரசியலை கைப்பற்றும் என தெரிவித்தார். தமிழகத்தில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில் நிலையான ஆட்சியமைய மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தாலும், அதில் அவசரமாக முடிவெடுக்காமல் ஆழ  சிந்தித்து முடிவு எடுக்க வேண்டுமென தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...