15 நாட்களுக்குள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்வு வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.

சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...