வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 12-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் உற்சாகம்


வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 12-ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவை தைபூச விழாக்குழு தலைவர் வள்ளிக்கன்னு துவங்கி வைத்தார்.



தொடர்ந்து 8-ம் தேதியன்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 2 மணிக்கு வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து முருகன் வள்ளி தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடுகளும் நடைபெற்றது. 



இதைத்தொடர்ந்து வியாழனன்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் நல்லகாத்து மைதானத்தில் இருந்து வால்பாறை ஓம்சக்தி வார வழிபாடு குழுவினரின் பால் குடம் மற்றும் சேசு நாடார் தைப்பூச மகளிர் குழுவினரின் கொடுமுடி தீர்த்தம் மற்றும் சேலம் மாதேஷ் அலகு பூட்ட லட்சுமணம் மற்றும் வால்பாறை முருக பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி ஊர்வலமாக வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக முருகன் கோவிலை வந்து அடைந்தது.



தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தினை வால்பாறை வட்டாட்சியர் கோமதி, டாக்டர் முனிசாமி, வனச்சரக அலுவலர் சேகர், காவல் ஆணையர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சம்பத்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.



இத்திருவிழாவில் பல்வேறு நடன நாட்டிய நிகழ்ச்சிகள், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இரவு 8 முதல் 11 மணிவரை முருகன் திருவீதி உலா வால்பாறை முக்கிய வீதிகளில் நடைபெற்று, இரவு 12 மணிக்கு வான வேடிக்கையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இதில், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...