கோவையில் எந்தவித பரபரப்புமின்றி இதய தெய்வம் மாளிகை: குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள்!


தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்றும் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா குறித்தும், தன் அமைச்சரவை சகாக்கள் குறித்தும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து, தமிழக  அரசியல் களத்தை பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இரு தரப்பாக பிளவடைந்துள்ள கட்சியில் எந்தபக்கம் செல்வதென்று சட்டமன்ற உறுப்பினர்களுடன்  அ.தி.மு.க தொண்டர்களும் கலக்கமடைந்தனர்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை எந்த வித பரபரப்புமின்று காட்சியளிக்கிறது. கட்சி தொடர்பான எந்த பிரச்சனையின் போதும், விழாக்களின் போதும் தொண்டர்கள் படை சூழ காணப்பட்ட இதய தெய்வம் மாளிகை தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் ஒரு சிலரும் என்ன செய்வதென்று அறியாமல் தொலைக்காட்சியை பார்த்தபடி பெரும் குழப்பத்தில் அமர்ந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடி வருகின்ற நிலையில், கோவை மிகுந்த அமைதியான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...