அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரிகளில் பணி வழங்குவதை எதிர்த்து அரசு கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 1000-ம் பேர் தமிழகத்தில் செயல்படும் அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 87 அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :- 

கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு  கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...