மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நூதன நிபந்தனைகளுடன் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் காரமடையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினமும் 10 குறள்கள் வீதம் 10 நாட்களுக்கு 100 குறள்கள் படிக்க வேண்டும் என்ற நூதன நிபந்தனைகளுடன் நீதிபதி சுரேஷ்குமார் ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 31ம் தேதி சாலையோரத்தில் சவுண்டமுத்து என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தனியார்கல்லூரி மாணவர்கள் (ஹரி, மணிகண்டன், முத்து) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான மாணவர்கள் சார்பில் மேட்டுப்பாளையம்நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவினை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் மூன்று பேருக்கும் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். தனியார் கல்லூர் மாணவர்கள் மூவரும் தினமும் 10 குறள்கள் வீதம் 100 குறள்களை அதற்குரிய விளக்கத்துடன் மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்து நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ் குமார் தனது உத்திரவில்  தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...