மத்திய பட்ஜெட்டில் 'சுகாதாரத் துறை' குறித்து மருத்துவர் ராஜேஸ் கண்ணா கருத்து!

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை 'வெற்று' பட்ஜெட்டாகவே பார்பதாக கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார துறை குறித்த மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதார துறைக்கு 28 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை உயர்வு, மருத்துவ செலவு, நோய்களின் தாக்கத்தை ஒப்பிடுகையில் மிக குறைவு".

நாட்டில் உள்ள 1.50 லட்சம் சுகாதார துணை நிலையங்களை தரம் உயர்த்தி, சுகாதார நலமையமாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு, உயிர் காக்கும் மருத்துங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகுறைப்பு வரவேற்கத்தக்கது. 

ஆனால், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதியை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. 

அதேவேளை இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் என்பதால் அந்த மையங்கள் அனைத்திலும் ஒரு பிசியோதெரபி மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாத பக்கவிளைவுகள் முற்றிலும் இல்லாத தரமான சிகிச்சைக்கு வழிவகை செய்யும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்பது எந்த அறிவிப்பும் இல்லை. பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என்பதை சிறிதும் செவி சாய்க்காமல் இத்தாண்டும் வந்துள்ள மத்திய பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்டாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்றும் என்ன நிலையில் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவை பெரிதும் கேள்வி குறியாக்கியுள்ளது' என கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...