டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

 

இதுகுறித்து மாநகராட்சி (பொ) ஆணையர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து 100 வார்டுகளிலும் டெங்கு தொடர்பான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



மேலும், மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார அலுவலர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுவதும், தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுகல், பூங்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டும் மற்றும் டெங்கு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொண்டும் வருகிறார்கள். 

மேலும், மாநகராட்சி புகை வண்டி வாகனங்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளுக்கு சென்று புகை மருந்து அடித்து வருகிறார்கள். 

மேலும், குறிப்பாக பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியும், மாடியிலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொசு மருந்து ஊற்ற வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். வீட்டைச் சுற்றியும், மாடியிலும் தேவையற்ற பொருட்களை போட வேண்டாம். தண்ணீரை காற்றுப் புகாத வண்ணம் மூடி வைக்கவும் அல்லது துணிகளைக் கொண்டு கட்டி வைக்கவேண்டும். 

மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...