மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி 'டிஐஇ ' அமைப்பின் கோவை மண்டல தலைவர் கருத்து.


மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் தேசிய ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். வேலை வாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும்' என ''டிஐஇ ' (TiE) அமைப்பின் கோவை மண்டல தலைவர் கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட் குறித்து பேசுகையில்:

'ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லாபத்திற்கு முதல் 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்ட தேவையில்லை என்பதில் தற்போது முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்ட தேவையில்லை என்று மாற்றம் கொண்டு வந்திருப்பது நல்ல அம்சம்.

ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ரூ.2 கோடி வரை விற்பனை செய்யும் சிறு தொழில் அமைப்புக்கள் உத்தேச வருமானமாக விற்பனயில் 8% கணக்கிட்டு அதற்கு வரி செலுத்த முடியும். இதை டிஜிட்டல் முறையிலொ வங்கிக் கணக்கு மூலமாகவோ செய்யப்பட்டால் 6% மட்டுமே வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரி செலுத்தினால் போதும். ரூ.2 கோடி வரை விற்பனை உள்ளவர்களுக்கு கட்டாயத் தணிக்கை இல்லை. நீண்ட கால சொத்து லாபக்கணக்கீடு 3 ஆண்டுகளுலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது நல்ல பலன் தரும்.

ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வருமான வரி 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கூடுதலாக 10% உபரிவரி செலுத்த வேண்டும். வருமான வரி விகிதத்தைக் குறைத்திருக்கலாம்.

வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச அளவை உயர்த்தாதது ஏமாற்றம். கருப்புப்பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில்எ டுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் ரூ.2000 மேல் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும். இதற்கான ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். டிஜிட்டல் முறையில் நடைபெறப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவைக்கட்டணத்தை முற்றிலும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...