மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஒரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



2017- 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தொழில் துறையினர் இந்த நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததாக தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

5 இலட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் தனிநபருக்கு வருமான வரியினை பாதியாக குறைத்து இருப்பதற்கும், சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வருமான வரியினை 25 சதவீதமாக குறைத்து இருப்பதற்கும், மறைமுக வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது உள்ளிட்டவற்றிக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 

மேலும் அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவுமெனவும் கூறிய அவர், மின்னணு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்திற்கென இந்த பட்ஜெட்டில் இரயில்வே தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், இந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த நிதி நிலை அறிக்கை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும், நீண்ட கால அடிப்படையில் தொழில் துறையினருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊரக பகுதிகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...