தமிழ்நாடு சீருடைப் பணியில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை- ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும பெண்) மற்றும் தீயணைப்புத் துறை (ஆண்) ஆகிய பதவிகளுக்கான மொத்தம் 15 ஆயிரத்து 711 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 21.5.2017ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதற்கான வயது வரம்பு 1.7.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

மேலும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் 18 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை- 8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பிப்ரவரி 1ம் தேதி முதல் தேர்வு வரை இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...