கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பு!


கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர்  முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசுடன் இணக்கமாக நல்லுறவை பேணவே கேரளா விரும்புகிறது எனவும் நீர் பகிர்தல் தொடர்பான பிரச்சனைகளை இருமாநி்ல அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் அந்த விவகாரத்தை கேரள அரசு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரளா புரிந்து இருப்பதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...