ஜெம் மருத்துவமனை முதல் முறையாக தென்னிந்தியாவில் லேப்பிராஸ்கோப்பி மூலம் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை


ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் மெதந்தா இணைந்து முதல் முறையாக தென்னிந்தியாவில்  கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை லேப்பிராஸ்கோப்பி முறையில் செய்துள்ளது. ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு லேப்பிராஸ்கோப்பி முறையில் கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை செய்தார். மெதந்தாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாயின் நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 



கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் என்பவர் கல்லீரல் நோயால் 1 வருட காலமாக அவதிப்பட்டு வந்தார். இதில் அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அவரது மனைவி ஷீபா மூலமாக தனது வலது பக்க கல்லீரலை தானமாக வழங்கினார். எனவே அவருக்கு லேப்பிராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஷீபா 4-5 நாட்களில் குணமடைந்து விட்டார். அவரது கணவர் இன்னும் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார். 

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில்; வெளிநாடுகளில் 72-80 சதவீதம் வரை அதிக அளவில் உடலுறுப்பு தானம் மூலமாக லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இந்தவகையான உடலுறுப்பு தானத்தில் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு இரண்டு வகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றொன்று நெருங்கிய சொந்தங்கள் - வேறு பல காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்களால் உறுப்பு தானம் செய்ய மேலை நாடுகள் போல் முன்வருவதில்லை. இதனால் இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தில் சொந்தபந்தங்கள் உறுப்பு தானம் அதிக அளவில் உள்ளது. கல்லீரல் தானம் செய்தால் 35-40 நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும் இத்தனித்தன்மை கல்லீரலுக்கு மட்டுமே உள்ளது. கல்லீரலை பெற்று கொண்டவர்களுக்கும் அக்கல்லீரல் 1-2 மாதங்களில் வளர்ந்து விடும். இதுபோன்ற கல்லீரல் தானம் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தெனிந்தியாவில் ஜெம் மருத்துவமனை முதல் முறையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...