கோவை விழாவின் ஒருபகுதியாக தலைகவச விழிப்புணர்வு பேரணி

யங் இந்தியா அமைப்பின் கோவை கிளை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 9-வது ஆண்டாக கோவை மாநகரில் கோவை விழா கொண்டாட்டம் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.

இதன் ஒருபகுதியாக இன்று காலை 9:30 மணியளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் இனைந்து இருசக்கர வாகனம் மூலம் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்; கோவை விழா 9வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் கோவை விழா கொண்டாட்டம் சிறப்பாக கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒருபகுதியாக இன்று யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் சார்பில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை 1000த்திற்கும் அதிக உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் இருசக்கர ஓட்டுனர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தலைகவசம் அணிந்தும் பேரணியை நடத்தினர். அதேபோல் பொதுமக்களும் சாலை பயணத்தில் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 



  

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...