கோவையில் இரயில் நிலையம் முற்றுகை- ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து, கோவையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமான பணிகள் நடைபெறுவதை தடுத்த நிறுத்து வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்தும், கட்டுமான பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் ம.தி.மு.க வினர் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடுப்புகளை மீறி இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியினால் பாசனம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பவானி மற்றும் அமராவதி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...