ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு


கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் இன்று தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது, அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.ஜானட் தலைமையேற்று மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்து உறுதிமொழி உரையாற்றினார்.



அப்போது, இந்திய குடிமக்களாகிய நாம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜனநாயத்தின் மரபுகள் மற்றும் கடமைகளை நிரைவேற்றுவது நமது பொறுப்பு. எவ்வித இலவசங்களையும் ஏற்று வாக்களிப்பது தவறு. ஒவ்வொரு தேர்தலிலும் இனம், மதம், சமுதாயம், மொழி உள்ளிட்டவற்றில் பாகுபாடின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும், மாணவர்களிடையே அவர் உரையாற்றுகையில், வாக்காளர் பட்டியளில் தங்களது பெயர்கள் உள்ளனவா என்று மாணவர்கள் ஆய்வு செய்து தேர்தலில் முறையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை, அதனை எக்காரணத்திற்காகவும் நாம் தவிர்க்கக் கூடாது. மக்கள் நூறு சதவிகித வாக்கினை உறுதிசெய்ய வேண்டும்.



அதற்கான முதற்படி படித்த இளைஞர்கள் முன் வந்து வாக்களிப்பதே ஆகும். மாணவர்களை பின்தொடர்ந்தே மக்களும் தங்களது வாக்கினை உறுதிசெய்வர். கல்வியறிவற்ற மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேப்போன்று, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியிலும் அக்கல்லூரி முதல்வர் டாக்டர். பி. பாபாஞானகுமார் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...